ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நேற்றிரவு மும்பை கடல்பரப்பில் உல்லாசக் கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் பார்ட்டி நடத்திய விவகாரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஷாருக் கான் – கவுரி கான் தம்பதியரின் முதல் மகன் தான் ஆர்யன் கான். ஆர்யன் கானுக்கு சுகானா கான் என்ற தங்கையும், அப்ராம் என்ற தம்பியும் இருக்கிறார்.

அமிதாப் பச்சனின் பேத்தியான நவ்யா நவேலி நந்தாவுடன் ஆர்யா மிகவும் நட்பாக பழகி வருகிறார். இருவரும் டேட்டிங்கில் ஈடுபடுவதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் இருவருமே அதனை மறுத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு தான் ஆர்யன் கான் பட்டப்படிப்பை முடித்தார்.

இதையும் படிங்க: அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு