AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல்!

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல்
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல்

AR Rahman: கோலிவுட் , பாலிவுட், ஹாலிவுட் என கொடிக்கட்டி பறப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ஆர் அதிகம் பேசாதவராக இருந்தாலும் , அவ்வப்போது அவர் கொடுக்கும் பதில்களும் செயல்களும் THUG LIFE என கொண்டாடப்படும். அப்படியான சில சம்பவங்களை பார்க்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்த போதிலும் , கடந்த ஆண்டு 99 சாங்ஸ் என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி , அதனை தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இகான் என்னும் பாலிவுட் நடிகரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற பொழுது, தொகுப்பாளர் ஒருவர் இந்தியில் பேசி நடிகர் இஹானை வரவேற்க , “ இந்தியா ?” என குறுநகைத்தவாறு மேடையில் இருந்து இறங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் தொகுப்பாளரிடம் “ இதுக்காகத்தான் முன்னதாகவே தமிழ் தெரியுமா எனகேட்டேன் “ என வேடிக்கையாகவும் கேள்வி எழுப்பினார். பாலிவுட்டில் பணியாற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி மொழியால் சில அவமானங்களை சந்தித்திருக்கிறார்.

சென்னையில் Tha Future என்னும் அமைப்பை தொடங்கியிருந்தார், அப்போது நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ” பழைய பாடல்களில் வரிகள் தெளிவாக இருந்தது, சாமனியர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது..இப்போது ஏன் அப்படி இருப்பதில்லை “ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏஆர்.ரஹ்மான் “நல்ல சிஸ்டம் வாங்கிக்கோங்க கேட்கும்.. இல்லைனா ஹெட்போன் போட்டு கேட்டா புரியும்” என சுவாரஸ்யமாக பதிலளித்திருந்தார்.இது அங்கிருந்தவர்களை சிரிப்பலைகளில் ஆழ்த்தியது. மேலும் பதிலளித்த அவர் “ இசையை வேறு கோணங்களில் ரசிகர்களுக்காக படைக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு உருவாக்கப்படுகிறது. வரிகள் தெளிவாக இருக்கும் பாடல்களும் இருக்கிறதே “ என்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களை கவுரவிக்கும் விதமாக சிங்கப்பூரில் IFFA விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்தி மொழியில் சிறந்த நடிகருக்கான விருதை வழங்க ஏஆர்.ரஹ்மான் அழைக்கப்பட்டிருந்தார்.

எல்லா மொழிகளுக்கும் பொதுவான விருது என்பதால் ஆங்கிலத்திலேயே உரையாடல்கள் இருந்த நிலையில் , விருதை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் “ இந்த iffa சிறந்த நடிகருக்கான விருது , ரன்பீர் கபீர் அவர்களுக்கு “ என அறிவித்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: Chennai HC: அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை