அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார் !

திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதியை ஆதரித்து அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் செய்தார். அப்போது அவரை சந்தித்து அவரது முன்னிலையில் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் பி.சந்திரன் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

அவர், அமமுக நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் பதவி வகித்து வந்தார்.நிகழ்ச்சியின்போது சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. பி ஆர் சுந்தரம், பொன் சரஸ்வதி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலரும் உடனிருந்தனர்.


இது தொடர்பாக பேசிய பி.சந்திரன், போட்டியிலிருந்து விலகிக் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். காலம் காலமாக நாங்கள் அதிமுகதான் என தெரிவித்தார்.