பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏ..!

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் விதமாக ரத்தினசபாபதிக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவி நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது. இவருடன் சேர்த்து மாவட்டத்தில் அதிருப்தி வெளிப்படுத்திய பலருக்கும் பதவிகள் அளிக்கப்பட்டன.

இந்த சூழலில் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை அவர் சந்தித்து, பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தையும் காட்டினார். பின்னர், அவர் கூறியது:

அதிமுகவில் பதவியில் இருப்பதைவிட தொண்டராகவே இருக்கே விரும்புகிறேன். ஆகையால்தான் தற்போது வழங்கிய தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவு எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.