மதுரையில் பெண் அதிமுக வேட்பாளர் கடத்தல்

மதுரை வாடிப்பட்டி பேரூராட்சி 9வது வார்டு அதிமுக வேட்பாளர் இந்திராணி கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் மிரட்டி கடத்தி சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 18 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

9வது வார்டில் தி.மு.க., சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியும், அ.தி.மு.க., சார்பில் இந்திராணியும் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

திமுகவினர் வேட்பாளரை போட்டியின்றி அன்னபோஸ்ட் ஆக தேர்வு செய்ய அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாகவும் வாபஸ் வாங்க சொல்லி மிரட்டுவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதையும் படிங்க: Cell phone prohibited: அரசு பஸ் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை!