Actor Soori: நடிகர் சூரியிடம் 5 மணி நேரம் விசாரணை

நடிகர் சூரியிடம் 5 மணி நேரம் விசாரணை
நடிகர் சூரியிடம் 5 மணி நேரம் விசாரணை

Actor Soori: சினிமாக்காரர்களின் நட்பு எதுவரை என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். ஒரு காலத்தில் நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஈருடல் ஓருயிராய் இருந்தார்கள். இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் காமெடி கலக்கல் தான். இன்றளவிலும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

யார் யாரை ஏமாற்றியது என்பது விடை தெரியா கேள்வியாகவே இன்றும் தொடர்கிறது. அதே போல் நடிகர்கள் பரோட்டா சூரியும், விஷ்ணு விஷாலும் நண்பர்களாக சுற்றி திரிந்தனர். தற்போது பணப் பஞ்சாயத்து கோர்ட் படியேற வைத்திருக்கிறது. நடிகர் சூரியிடம் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ரூ.2.70 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

Actor Soori: நடிகர் சூரியிடம் 5 மணி நேரம் விசாரணை

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை, ரமேஷ் குடவாலா முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனராக பணியாற்றியவர் . இவர் நடிகர் சூரிக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி இந்த பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த மார்ச் 28ம் தேதி இது குறித்த விசாரணை சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றரை மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 மாதங்களுக்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா நேரடியாக விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் புகாரின் மீதான விசாரணையில் 3வது முறையாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆஜரான நடிகர் சூரியிடம் 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது போலீசார் கேட்ட 110 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: Cristiano Ronaldo: ரொனால்டோ மகன் உயிரிழப்பு