நடிகர் கார்த்தி தடுப்பூசி போட்டுக் கொண்டார்..!

கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் முடியுமோ என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்து மூன்றாவது அலை வரப் போகிறது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

உயிர் காக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பிரபலங்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள்.

தாங்கள் புகைப்படம் வெளியிட்டால் அதை பார்த்து தங்கள் ரசிகர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை தான்.இந்நிலையில் கார்த்தி தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன் #CovidVaccine என்றார்.