மரம் நடும் நடிகர் ஆர்யா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் நடிகர் ஆர்யா.இவரது சார்பேட்டா பரம்பரை படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளார்.

இன்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 90வது பிறந்தநாள்.இந்த பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை செய்துவருகின்றனர்.

அந்த வகையில் இன்று செம்மொழிப் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.அதன் பின்பு பேசிய அவர்,கடந்த வருடம் நடிகர் விவேக் அவர்களுக்கு நான் கடந்த ஆண்டு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். அப்துல் கலாம் பிறந்த நாளன்று நான் செடிகள் நடுவேன், அன்றைய தினம் நீ வரவேண்டும் என்று விவேக் கூறி இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் இன்று நம்மிடையே இல்லை.

எனவே அவரின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் மரக்கன்று நட என் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தூத்துக்குடியில் நடந்த என்கவுண்டர் !