காயத்திரி மந்திரம் விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாக கூறப்படுகிறது.காயத்ரி மந்திரத்தில் பல முக்கியத்துவங்கள் அடங்கியுள்ளது. இதை முறையாக உச்சரிக்கும் போது காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களாலேயே உணர முடியும்.
காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது,
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”
காயத்ரி மந்திரம் குரு மந்திரம்,சாவித்திரி மந்திரம் என்று போற்றப்படுகிறது.மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.
இதன் பொருள் பூர், புவ, ஸுவ எனும் மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
இந்த மந்திரத்தை முறையாக பயன்படுத்துபவர் அமைதியாய் இருப்பர்.மேலும் வாழ்க்கையில் காந்த சக்தி ஆகியவை உருவாகும், வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.