Fire Accident: சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து

fire accident in andhra pradesh
ஆந்திராவில் பயங்கர தீ விபத்து

Fire Accident: சென்னை தியாகராய நகர் பாண்டிபஜாரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் 50க்கு மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தீ விபத்தில் சிக்கி உள்ளவர்கள் தற்போது மொட்டை மாடியில் இருந்தபடி மக்கள் அலறி வருவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மொட்டை மாடியில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்து விசாரணை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக பெரிய அளவில் வணிக வளாகத்தில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் பாண்டிபஜாரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: Lata Mangeshkar funeral: அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கருக்கு இறுதி சடங்கு