சீனாவில் நூடுல்ஸ் உணவை சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் தேதி சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.

இதில் 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திங்களன்று மரணமடைந்துள்ளார்.