கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை 7 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், 8-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம்நாளை (நவ.14) ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடை பெறுகிறது.
இதுதவிர மருத்துவர் தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.