இதுவரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்துள்ளோம் – அமைச்சர் காமராஜ்

சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளார்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் குறித்த விவரங்களை வெளியிட்டார். கடந்த அக்டோபர் 1 முதல் தற்போது வரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்.