தடுப்பூசி போடுங்க..பரிசுகள் வெல்லுங்கள் ..

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் தங்கக்காசு ,செல்போன் கள் போன்றவைகள் வழங்கப்பட்டன.

நாளை 5வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கர் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்குவதாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !