மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீகித இட ஒதுக்கீடு இந்தாண்டு கிடையாது- உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு, 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் தீர்ப்பளித்தது.

இவ்வழக்குத் தொடர்பான விசாரணையில் மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது. அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு நாளை(அக்.27) தொடங்கவுள்ளது.இந்தநிலையில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இந்தாண்டு கிடையாது என தெரிவித்துள்ளது.