எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு மூன்று பேர் உயிரிழப்பு

Express Train Derails
எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு மூன்று பேர் உயிரிழப்பு

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. சில பெட்டிகள் கவிழ்ந்தன. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் காயமடைந்தனர். தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து, அலிபூர்தார் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில், அலிபூர்தார் சந்திப்பில் இருந்து 90 கிமீ தொலைவில் இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாக வடகிழக்கு ரெயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் கூடிய விபத்து நிவாரண ரெயில் புறப்பட்டுச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பெண்களின் திருமண வயதை உயர்த்தியது ஏன்?