அசாம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நிலநடுக்கம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை கட்டுப்படுத்த அரசுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில்,கொரோனாவின் மூன்றாம் அலை குறித்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.மேலும், மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் மணிப்பூர் மாநிலத்தின் சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 1.06 மணிக்கு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.