தமிழ்நாட்டில் 1,896 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1,916 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று பாதிப்பு 1,896ஆக குறைந்துள்ளது.

ஒரே நாளில் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 23ஆக பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 219 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 216 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று 223 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 225 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.