Crime: தாயை கொன்ற 17 வயது சிறுமி கைது

17 வயது சிறுமி கைது

Crime: தூத்துக்குடியில் நடந்த பயங்கரம் பெற்ற மகளே தாயை கொன்ற கொடூரம் ஆண் நண்பருடன் பழகுவதை கண்டித்த தாயை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்த 17 வயது சிறுமி.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முனிய லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் கணவனை இழந்து 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 17 வயது சிறுமி ஆண் நண்பருடன் பழகுவதை கண்டித்து உள்ளார் முனிய லட்சுமி. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி தனது தாயை ஆண் நண்பர்களின் உதவியோடு கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் யாரோ தனது தாயை கொன்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் அதிரடி விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தது இதனை தொடர்ந்து ஆண் நண்பர்கள் உட்பட பதினேழு வயது சிறுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: PV Sindhu: சுவிஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து