மகாராஷ்டிர மாநிலத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டம், கிங்கோன் கிராமம் அருகே நேற்று இரவு பப்பாளி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது. இதில், இந்த கோர விபத்தில், 15 பேர் பலியாகினர். 2 பேர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.

உயிரிழந்தவர்கள் அபோதா, கேர்கலா, ரவேர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.