World Champion: 14 முறை உலக சாம்பியன்! ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு!

14time-world-champion-sudden-announcement-of-retirement
14 முறை உலக சாம்பியன்

World Champion: பதினான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல WWE வீரர் ட்ரிபிள் ஹெச், தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 90களின் ஆரம்ப காலங்களில் ட்ரிப்பிள் ஹெச், ரசிகர்களிடையே கோலோச்ச துவங்கினார். அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரராக அறியப்பட்ட ட்ரிபிள் ஹெச், வளையத்திற்குள் ஆக்ரோஷமாக காணப்படுவார்.

போட்டிக்கான ரிங்கினுள், எதிர்க்கும் வீரரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ரத்தம் தெறிக்க மயிர்கூச்சறெயும் சண்டையான WWE போட்டிகளுக்கு பரவலான ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிகளின் நாயகனாகவே ட்ரிப்பிள் ஹெச் இருந்தார். பலர் இந்த போட்டிகளில் கோலோச்சினாலும், ட்ரிப்பிள் ஹெச்சின் யுக்தி, ஆக்ரோஷமாக எதிரே நிற்கும் வீரரை வீழ்த்தும் சாமர்த்தியம் ஆகியவை இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை அதிகரிக்க செய்தது.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரிப்பிள் ஹெச், பேட்டியில், தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். நான் மீண்டும் வளையத்திற்குள் சண்டையிட மாட்டேன். என் மார்பில் ஒரு டிஃபிபிரிலேட்டர் உள்ளது. இனி அதில் நேரடியாக தாக்குவது ஆபத்தை விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பரில், டிரிபிள் எச் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக WWE அறிவித்திருந்தது.

இதனை சுட்டிக்காட்டியே அவரும் பேசினார். கம்பீரமான, ஆரோக்கியமான தந்தை, திடீரென மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது எனது மகள்களின் மனதை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை’ என்று கூறியிருக்கிறார் ட்ரிப்பிள் ஹெச்.

டிரிபிள் எச்-க்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரகச் செயல்பட்டு வரும் ட்ரிப்பிள் ஹெச், கடந்த 27 வருடங்களாக ரசிகர்களின் மனதில் கோலோச்சி வருகிறார்.

இதையும் படிங்க: secret for shinning hair : பளபளப்பான முடி பெற இதோ டிப்ஸ்