கோவையில் நாளை 123 ஜோடிகளுக்கு இலவச திருமண

கோவையில் நாளை 123 ஜோடிகளுக்கு நடைபெற உள்ள இலவச திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

நாளை காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்குகிறார்கள். திருமணத்துக்காக வரும் திருமண ஜோடிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட உள்ளது.

கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சூட்கேஸ், கேஸ் ஸ்டவ், குத்து விளக்கு, சில்வர்குடம், குக்கர் உள்பட சமையலறை பொருட்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட 73 வகையான சீர் வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

முன்னதாக இந்த திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.