சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு தற்போது செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்திருக்கிறது. இதனை அவரின் நண்பர் ராஜ்சேகர் பாண்டியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிப்ரவரி 7-ம் தேதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார் சூர்யா. இதையடுத்து பிப்ரவரி 11-ம் தேதி, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக சூர்யாவின் சகோதரர், கார்த்தி ட்வீட் செய்திருந்தார். அதோடு சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் அவர் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் பாண்டியன், சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருப்பதாகவும், ரசிகர்களின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.