கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டை கேரளா பின்னுக்கு தள்ளியது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாட்டை கேரளா பின்னுக்கு தள்ளியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் பாதிப்புகளின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரசின் புதிய பாதிப்பு எண்ணிக்கை இன்று 7,283 ஆக பதிவாகி உள்ளது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 95,008 ஆக உயர்ந்து உள்ளது. 6,767 பேர் இன்று குணமடைந்து சென்றுள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரசின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டை இன்று பின்னுக்கு தள்ளியுள்ளது.