அக்டோபர் 15ஆம் தேதிமுதல் 50 விழுக்காடு இருக்கைகளைக் கொண்டு திரையரங்குகளை இயக்கலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற திரையரங்க நிறுவன பங்குகள் 18 விழுக்காடு வரை அதிகரித்து வர்த்தகமாகின.
இதனை தொடர்ந்து திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் பங்குச்சந்தையில், பி.வி.ஆர். மற்றும் ஐநாக்ஸ் பங்குகளில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக பங்குத்தரகர்கள் தெரிவிக்கின்றனர்.