ஆன்லைன் ரம்மி: ஆக்ஸ்ட் 3ம் தேதி தீர்ப்பு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆக்ஸ்ட் 3ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை எனறும் வாதிட்டனர். மேலும், எந்தவொரு காரணங்களும் இல்லாமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.’

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றபட்டதாகவும், இந்த சட்டத்தை இயற்ற முழு அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் தீர்ப்பை ஆக்ஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தது.