Holiday for schools: 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: Today is a holiday for schools and colleges in 2 districts. விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த டிசம்பர் 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் 01.12.2022 வரையிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், 2ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்குப்முன் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. விவசாய நிலங்களில் நெற்பயிர்களும் சேதமாயின. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.