தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு

Corona virus: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 24 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் உள்பட 9 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 11 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 44-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 43 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 347 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும் உள்பட 513 பேர் சிகிச்சையில் உள்ளனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.