Tamilnadu CM M.K.Stalin : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Letter to Central Government :12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

TN CM M.K.Stalin

சென்னை: Tamilnadu CM M.K.Stalin : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களை அவர்களது படகுகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்பட 12 அப்பாவி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே மத்திய அரசு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள், அவர்களது மீன் பிடி படகுகளையும் விடுவிக்க தேவையான உடனடி நடவடிகைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் கடிதத்தில், ஜூலை 15-ஆம் தேதி முடிவடைந்த 61 நாள்கள் மீன் பிடித்தடைக்கு பிறகு, தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களை அவர்களது படகுகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கடித்ததில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 7 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பத்தையடுத்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.