Sudden fire in Chennai train: சென்னை ரயிலில் திடீர் தீவிபத்து: உயிர் தப்பிய பயணிகள்

சென்னை: A sudden fire broke out in a train coming from Ahmedabad to Chennai leaving the passengers shocked. அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகள் எச்சரித்த காரணத்தால் ரயில் நிலையத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் தரப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அதன் பின்னரே நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் கூடூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு ரயில் பெட்டியின் உள்ளே எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்தில் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டு உள்ளது.