Seizure of 6.2 Kgs of Gold worth Rs.2.83 Crores: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.83 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 6.2 Kgs of Gold worth Rs.2.83 Crores by Chennai Air Customs: ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர். உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 26.08.2022 அன்று டாக்காவிலிருந்து வந்த விமானத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது அந்த விமானத்தின் கழிவறை ஒன்றில் ரூ.45.15 லட்சம் மதிப்புள்ள 995 கிராம் எடையுள்ள ஒரு தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் 25.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 29.92 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கமும், 24.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.78.46 லட்சம் மதிப்புள்ள 1.736 கிலோ கிராம் தங்கமும், 23.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.55.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கிராம் தங்கமும், 22.08.2022 அன்று நடத்தப்பட்ட இருவேறு சோதனைகளில் ரூ.73.79 லட்சம் மதிப்புள்ள 1.622 கிலோ கிராம் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 22.08.2022 முதல் 26.08.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.