Rs.43.41 lakhs worth Gold seized: சென்னை விமான நிலையத்தில் ரூ. 43.41 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: 988 gms of Gold worth Rs. 43.41 lakhs seized by Chennai Air Customs. சென்னை விமான நிலையத்தில் ரூ. 43.41 லட்சம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உளவுப்பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் கடந்த 14ம் தேதி, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை அரங்கில் உள்ள தீர்வையற்ற விற்பனையகம் அருகே இந்திய விமான நிலைய சேவைகள் நிறுவனத்தில் பணிபுரியும் நுகர்வோர் முகவர் ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் தடுத்து நிறுத்தினர்.

அவரிடம் இருந்து 1084 கிராம் எடையுள்ள தங்க நிற ரப்பர் போன்ற பொருள் அடங்கிய நான்கு பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அவரிடம் இருந்து ரூ. 43.41 லட்சம் மதிப்பில் 988 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து இண்டிகோ ஜி.இ. 66 என்ற விமானத்திலிருந்து வந்திறங்கி, ஜி.இ. 1207 என்ற விமானத்தில் கொழும்பு சென்ற இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர் விமானம் மாறும் இடத்தில் தம்மிடம் இந்தப் பொட்டலங்களை வழங்கியதாக விசாரணையின்போது அந்த நபர் தெரிவித்தார்.

மொத்தம் ரூ. 43.41 லட்சம் மதிப்பில் 988 கிராம் தங்கம், சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.