Tirupati Train: சிக்கமகளூர் ரயில்வே நிலையம் கட்டப்பட்டு பத்தாண்டுகள் ஆன நிலையில் இதுவரை சிக்கமகளூரில் இருந்து பெஙகளூர் எஸ்வந்த்பூருக்கு ஒரு பேசஞ்சர் ரயிலும் அதேபோல சிக்கமகளூரில் இருந்து சிமோகா விற்க்கு ஒரு பேசஞ்சர் ரயில் மட்டும் இயங்கி வந்தன
அதே மார்க்கத்தில் அங்கு இருந்து மீண்டும் சிக்கமகளூருக்கு இரண்டு ரயில்கள் மட்டும் வந்த நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் பலமுறை பாராளுமன்ற உறுப்பினர் கோட்டா ஸ்ரீநிவாசிடம் கோரிக்கை மனுவை வைத்து வந்தனர் இந்த நிலையில் புதியதாக சர்கலேஸ்புரா வழியாக மங்களூரை இணைக்கக்கூடிய தண்டவாள வேலைப்பாடுகளும் சிக்கமகளூரில் இருந்து நடந்து வரும் நிலையில்

அந்த வேலை பகுதி வரை மட்டுமே நடந்துள்ளது இந்த நிலையில் புதியதாக ரயில்வே துறை திருப்பதி சிக்கமகளூர் வாராந்திர ரயிலை இயக்குவதற்கு முன்வந்துள்ளது திருப்பதியில் இருந்து வாரத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு ரயில் கிளம்பி மறுநாள் காலை 10 மணிக்கு சிக்கமகளூர் வந்து அடையும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு சிக்கமளூரில் இருந்து ரயில கிளம்பி சனிக்கிழமை அன்று திருப்பதி சென்றடையும்
இதை ரயில்வே துறை மாநில இணை அமைச்சர் சோமண்ணா வரும் 11ம் தேதி சிக்கமகளூரில் இருந்து துவக்கி வைக்க உள்ளதாகவும் அவரை நேரடியாக அழைப்பு விடுத்துள்ளதாகவும் உடுப்பி சிக்கமகளூர் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டா ஸ்ரீநிவாஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது
இந்த ரயில் சிக்கமகளூர் கடூர் தேவனூர் டிப்டூர் தும்கூர் கிருஷ்ணராயபுரம் ஒயிட்ஃபீல்டு குப்பம் பங்காருபேட்டை காட்பாடி ஜோலார்பேட்டை சித்தூர் வழியாக திருப்பதி சென்றடைகிறது அதே மறுமார்க்கத்தில் அந்த வழியாக சிக்கமகளூர் வந்தடைகிறது இதற்கான வேலைப்பாடுகள் ரயில்வே துறை சார்பாக நடந்து விரைவில ரயில் இயக்படும்



