President will visit Coimbatore: வரும் 18ம் தேதி குடியரசுத்தலைவர் கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோயமுத்தூர்: The President is coming to Coimbatore on the 18th to attend the Shivratri function of Isha Yoga Centre. ஈஷா யோக மையத்தின் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள குடியரசுத்தலைவர் வரும் 18ம் தேதி கோவை வருகிறார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்கிறார்.

குடியரசுத்தலைவர் கோவை வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் காணொலி மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில், 5,000 காவல்துறையினரும், மாநகரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் என 6000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அண்டை மாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.