Power shutdown in Trichy: திருச்சியில் நாளை மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

திருச்சி: Power shutdown in parts of Trichy tomorrow. திருச்சியின் சில பகுதிகளில் நாளை (4ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீதிமன்ற துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி மாநகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, பாக்காலி தெரு, புது ரெட்டி தெரு, மத்திய பேருந்து நிலையம், பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னர்ஸ் சாலை, அண்ணாநகர், உழவர்சந்தை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என டாங்கெட்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. , குத்பிஷா நகர், ஜெனரல் பஜார், பட்டாபிராமன் தெரு, KMC மருத்துவமனை, புத்தூர் சந்திப்பு, அருணா தியேட்டர், கணபதிபுரம், வில்லியம்ஸ் சாலை, சோனா மினா தியேட்டர், MGMGH, பீமா நகர், மாவட்ட நீதிமன்றம், கூனி பஜார், செடல் மாரியம்மன் கோவில், வண்ணாரப்பேட்டை, மேஜர் சரவணன் சாலை, ஈ.வி.ஆர். சாலை, வயலூர் சாலை மற்றும் பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேலும் மின் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு, 94987-94987 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.