Power cut in Chennai: சென்னையில் இன்றைய மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

சென்னை: It has been announced that there will be power cut in various important areas in Chennai today. சென்னையில் இன்று பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் நிறுத்த் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக கிண்டி, ஐடி காரிடர், வேளச்சேரி, கே.கே நகர், பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, கிண்டி பகுதியின் வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர் பகுதி, ஏ.ஜி.காலனி, நேதாஜி காலனி, கல்கி நகர், ஆண்டாள் நகர் விரிவு, எம்.ஜி.ஆர் நகர்.

ஐடி காரிடர் பகுதியின் தரமணி பள்ளி சாலை, அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம்.

வேளச்சேரி பகுதியின் ராம் நகர் 7,8,10,11 மற்றும் 12வது தெரு, விஜயா நகர் 3,4,5வது தெரு, ரோசி பிளாட், பைபாஸ் மெயின் ரோடு.

வியாசர்பாடி பகுதியின் ராயபுரம் அண்ணா பூங்கா எம்.சி.ரோடு, சிமென்ட்ரி ரோடு, வெங்கடாச்சலாம் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, வீராசாமி தெரு, வேலாயுதபாண்டியன் தெரு, பஜன கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு.

கே.கே.நகர் பகுதியின் விருகம்பாக்கம் இந்திரா நகர், ராஜீவ்காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்.ஜி.ஆர் தெரு வளசரவாக்கம் கேசவர்த்தினி, சௌத்திரி நகர் மெயின் ரோடு, பெத்தேனியா நகர், ஆற்காடு ரோடு பகுதி.

பெரம்பூர் பகுதியின் பேப்பர் மில்ஸ் ரோடு ராஜாபாதர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிசாலை பகுதி, சுப்ரமணியன் சாலை பகுதி ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு மேல் மின் விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.