Power cut: மதுரை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

மதுரை: Announcement of power cut areas in Madurai district tomorrow. மதுரை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்த பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது, செடி கொடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வரை கொட்டாம்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலைமுடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வெ.புதூர், காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.