Guidelines announced for Ganesh festival :பிஓபி, பிளாஸ்டி விநாயகர் சிலை பயன்படுத்த தடை, விதிகளை மீறினால் கிரிமினல் வழக்கு: விநாயகர் பண்டிகைக்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

பெங்களூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி பெற 8 மண்டலங்களில் 63 ஒற்றை சாளரம் முறையை தொடங்க பெங்களூரு நகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

பெங்களூரு: Guidelines announced for Ganesh festival : மாநிலத்தில் தற்போது விநாயகர் பண்டிகைக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது. சாம்ராஜ்பேட்டையில் உள்ள‌ ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகர் திருவுருவப் பந்தலில் வீர சாவர்க்கரின் உருவப்படம் வைப்ப‌து தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்களூரு மாநகராட்சி, விநாயகர் சதுர்த்திக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, விதிகளை மீறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளது. பொது விநாயகர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நகரில் மெதுவாக தொடங்கியுள்ளன. இதனால், விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் விநாயகர் சிலை வைத்து வணங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு அனுமதி பெற பெங்களூரு மாநகராட்சியில் (BBMP) உள்ள‌ 8 மண்டலங்களில் 63 ஒற்றை சாளரம் முறையை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் வெளியிட்டார். அரசு உத்தரவின்படி, பெங்களூரு மாநகராட்சி 63 ஒற்றை சாளர மையங்கள் மற்றும் நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.

இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபட மாநகராட்சி வகுத்துள்ள விதிகள் முறைகள் (Rules and Procedures laid down by the BBMP):

வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

விநாயகருக்கு இந்த முறையும் கெமிக்கல் பெயின்ட், தெர்மாகோல், பிஓபி தடை
தடை செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்தினால் அபராதம் மற்றும் குற்றவியல் வழக்கு பதிவு.

விநாயகர் சிலை தயாரிப்பவ‌ர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

வீட்டில் விநாயகரை கரைக்க ஏற்பாடு செய்தல்.

பக்கெட், டிரம் போன்றவற்றில் சிலைகளை கரைக்கலாம்.

பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட இடத்தில்/குளங்களில் விசர்ஜனம் செய்வது கட்டாயம்.

குளம், ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க திறமையான நீச்சல் வீரர்கள் மற்றும் என்டிஆர்எஃப் குழுவை பெங்களூரு மாநகராட்சி நியமித்துள்ளது.

விநாயகர் சிலைகளை வைத்து வணங்கும் விழா சுமூகமாக நடத்த பெங்களூரு மாநராட்சியில் இருந்தே வார்டுக்கு ஒரு நோடல் அதிகாரியை நியமித்தல்.

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

பெங்களூரு மாநகராட்சி, காவல் துறை, பெஸ்காம் மற்றும் தீயணைப்புப் படையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து குழுக்களிலும், நகரின் 63 பகுதிகளில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.