Passport service: பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை செயல்படும்

சென்னை: Passport service centers will be operational tomorrow. பாஸ்போர்ட் சேவை மையங்கள் வார விடுமுறை தினமான நாளை சனிக்கிழமையும் வழக்கம்போல் செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்கள் வார விடுமுறை தினமான நாளை நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை செயல்படும்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி சான்றிதழ் (PCC) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை இநத் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்த நான்கு பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் அன்றைய தினம் நடைபெறும் சிறப்பு இயக்கத்தில் கையாளப்படவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.