Passenger Transfer facility: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு நகரங்களுக்கு பயணிகள் மாறிச்செல்லும் வசதி தொடக்கம்

சென்னை: Union Aviation and Steel Minister Jyothir Aditya Scindia today inaugurated the domestic city transfer facility at Chennai Airport. மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா இன்று சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு நகரங்களுக்கு பயணிகள் மாறிச்செல்லும் வசதியைத் தொடங்கி வைத்தார்.

இந்த வசதி விமானப் பயணிகளுக்கு பயனளிக்கும் என்பதுடன், மீண்டும், மீண்டும் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமின்றி, நேரத்தை மிச்சப்படுத்த உதவும், மேலும் இத்தகைய பயணிகள், வருகை மட்டத்திலிருந்தே பாதுகாப்புப் பகுதிக்குப் பிந்தைய ஆய்வுக்கு (ஸ்கிரீனிங்கிற்கு) உடனடியாக செல்லலாம்.

இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன், இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் சஞ்சீவ் குமார், விமான நிலைய ஆணையம், அரசு முகமைகள், விமான நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், மாறிச் செல்லும் வசதியை அணுகும் முதல் பயணிகளுடன் கலந்துரையாடினார். இந்த வசதியைப் பயன்படுத்திய பயணிகள், அமைச்சர் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், பயணிகளின் வசதியை அதிகரிக்க இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.