No general quarterly exam: தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது

சென்னை: There is no general quarterly exam in Tamil Nadu schools this year. தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் எழுதினர்.

மேலும், காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதன்படி, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை விடப்படுகிறது. இதற்கான விரிவான கால அட்டவணை மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 12ம் வகுப்புகளுக்கு 22ம்தேதி மொழிப்பாடமும், 23ம்தேதி ஆங்கிலமும், 26ம்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், 27ம்தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன், 28ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 29ம்தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல், 30ம்தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், 11ம் வகுப்புக்கு 22ம்தேதி ஆங்கில பாடம், 23ம்தேதி மொழிப்பாடம், 26ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 27ம்தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியியல், 28ம்தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல், 29ம்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், 30ம்தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது, பொதுத்தேர்வு போல் காலாண்டுத்தேர்வு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.