Corona virus: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று அதிகரிப்பு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா

Corona virus: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாகவே பதிவாகி வருகிறது. நேற்று தினசரி பாதிப்பு 35 ஆக பதிவான நிலையில் இன்று தொற்று பாதிபு 59 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: – தமிழகத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 36 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 12,612 – மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Electric Bus: டெல்லியில் இன்று முதல் இ-பேருந்துகள் துவக்கம்