M.K.Stalin rescued the injured person: விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மு.க.ஸ்டாலின்

சென்னை: M.K.Stalin rescued the injured person and sent him to the hospitalசென்னையில் டூவீலர் விபத்தில் தலையில் அடிபட்டுக்கிடந்தவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை, அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயத்துடன் கிடந்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வழியே தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கி சென்று, காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜ் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் கட்சியினர் மற்றும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.