Jallikattu bull birthday: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்: இணையத்தில் வைரல்

சிவகங்கை: A Jallikattu bull celebrated his birthday by cutting a cake near Manamadurai is going viral on the internet. மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த கிருங்காகோட்டை கிராமத்தில் ஜெகதீஸ்வரன், கோபிநாத், அஜித்குமார் ஆகிய 3 சகோதரர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 7 ஜல்லிக்கட்டு காளைகளை அவர்களது கிராமத்தில் வளர்த்து வருகின்றனர். அதில் கரிகாலன் என்ற ஜல்லிக்கட்டு காளைக்கு ஆண்டுதோறும் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் காணும் கரிகாலன் காளையை அலங்கரித்து, கோவிலுக்கு அழைத்து சென்று ஆரத்தி எடுத்தி வீட்டிற்கு வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினர். காளையை வீட்டில் ஒரு பிள்ளையாய் நினைத்து குடும்பமே இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொரு மாட்டுக்கும் பிறந்தநாள் வரும்போது தங்களது வீட்டிற்குள் மாட்டை அழைத்து வந்து அதனை அழகுபடுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை
சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, நேற்று இவர்களது ஜல்லிக்கட்டு காளைகளில் ஒன்றான கரிகாலன் என்ற காளைக்கு ராணுவ சகோதரர்களின் குடும்பத்தினர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவலாகிவருவதோடு பலரின் பாராட்டை பெற்றுள்ளது.