School Holiday: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை: Holidays for educational institutions in 9 districts of Tamil Nadu. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முமுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் நேற்றும் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.