Bakrid wishes : பக்ரீத் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து, தியாகப் பெருநாளை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்

TN CM M.K.Stalin

சென்னை: Bakrid wishes : பக்ரீத் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும். அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும் என்ற கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் அளித்த போதனைகளை அனைவரும் பின்பற்றும் சகோதரர்கள் இந்த பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்த தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து, தியாகப் பெருநாளை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பெருநாளையொட்டிகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரவி உள்பட தமிழக அமைச்சர்கள், அதிமுக சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுகவைச் சேர்ந்த வைகோ, பாமகவைச் சேர்ந்த ராமதாஸ், அன்புமணி, தேமுகவைச் சேர்ந்த விஜயகாந்த், விசிகவைச் சேர்ந்த தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.