Express trains canceled:13 நாட்களுக்கு விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: Express trains canceled for 13 days. பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில், ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை எழும்பூர் – காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களும், காரைக்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடையே, 7 நாட்களுக்கும் ரத்து செய்யப்படுகின்றன

சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு இரவு 10.05 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 17, 19, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 16, 17, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்குப் புறப்படும் அதிவேக விரைவு ரயில் 22, 24 மற்றும் 27ஆம் தேதிகளிலும், மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புறப்படும் அதிவேக விரைவு ரயில் 23, 26 மற்றும் 28ஆம் தேதிகளிலும் இயக்கப்படாது.

பாலக்காட்டிலிருந்து புறப்படும் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயிலும், திருச்செந்தூரிலிருந்து புறப்படும் திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயிலும் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இயக்கப்படாது.

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.