சென்னை: Distribution of Bags with Jute Mark Logo to College students சணல் நட்சத்திர மதிப்பீடு லோகோவுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
சணல் தொழில், இந்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கிய தொழில்களில் ஒன்றாகும். தங்க இழை என்று அழைக்கப்படும் சணல், இயற்கையான, புதுப்பிக்கத்தக்க, மக்கும் மற்றும் பாதுகாப்பான பேக்கேஜிங்கிற்கான அனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கிறது. தேசிய சணல் வாரியம், சணல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொள்கிறது.
சென்னையில் உள்ள பிரபல ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இன்று, தேசிய சணல் வாரியம், (என்ஜேபி) 75-வது ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தின் அமுதப்பெருவிழா கொண்டாடப்பட்டது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சணல் நட்சத்திர மதிப்பீடு முத்திரை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்காக, NJB (Chennai), 1,000 சணல் பைகளை இலவசமாக (சணல் நட்சத்திர மதிப்பீடு முத்திரைவுடன் அச்சிடப்பட்டது) விநியோகிக்க பட்டது. “சணல் நட்சத்திர மதிப்பீடு முத்திரை” இந்திய சணல் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஒரு புதிய முயற்சி ஆகும்.
முனைவர் ரெஜி மணிமேகலா, துணை முதல்வர், மற்றும் முனைவர் ஷைனி ஜான் வைரமன், துணை முதல்வர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, இருவரும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, சணல் நட்சத்திர மதிப்பீடு முத்திரை அச்சிடப்பட்ட சணல் பைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள். சணல் பன்முகப்படுத்தப்பட்ட பொருட்களின் பல்வேறு பயன்பாடுகள் பற்றிய காணொலி விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் அபாயங்கள், என்ஜேபி-யின் தென் மண்டல துணை இயக்குனர் திரு.டி.அய்யப்பன் சுட்டிக்காட்டினார்.
இந்தியா முழுவதும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்திலும், வருங்கால தலைமுறையைக் காப்பாற்றுவதற்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பைகளைப் பயன்படுத்தவும் திரு.டி.அய்யப்பன் அறிவுறுத்தினார். முனைவர் ரெஜி மணிமேகலா, துணை முதல்வர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் .