O.Panneerselvam Discharged: ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

சென்னை: Discharged from O. Panneerselvam Hospital: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

கடந்த 15ஆம் தேதி முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான (Former chief minister and ex-coordinator of AIADMK) ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் (Chennai Private Hospital) அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது கொரோனா தொற்றிலிருந்து (Covid19) முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று அவர் வீடு திரும்பினார்.

மேலும் மருத்துவர்கள் 3 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதால், கிரீன்வேஸ் சாலையில் (Chennai Greenways Road) அமைந்துள்ள தன்னுடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தனியார் விடுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தி (He isolated himself) கொள்ளவுள்ளார்.