Director of Pothigai TV took charge: பொதிகை தொலைக்காட்சி செய்திப்பிரிவு இயக்குனராக குருபாபு பலராமன் பொறுப்பேற்பு

சென்னை: Gurubabu Balaraman took charge as the News Section Director of Pothikai TV: பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குனராக குருபாபு பலராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தகவல் பணி சேவையில் 1995 ஏப்ரல் மாதம் இணைந்த குருபாபு பலராமன், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியராக பணியை தொடங்கினார். பின்னர் இவர் அங்கேயே உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் 2009ம் ஆண்டு துணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்று, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றி இருப்பதுடன், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் 2019-ல் இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்தில் பணியாற்றினார்.


சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிபுரிந்த போது அவர், இந்திய பத்திரிகை பதிவாளர் பிரிவின் துணைப்பதிவாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராவார்.

தேசிய ஊடக மையத்தில் முதன்மை தலைமை இயக்குனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா:

புதுடெல்லி: பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமை இயக்குனர் ஜெய்தீப் பட்னாகர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, புதுடெல்லி தேசிய ஊடக மையத்தில் இன்று நடந்தது. Officers and staff of Press Information Bureau bid warm farewell to Shri Jaideep Bhatnagar, Principal Director General, on his superannuation.

இவர், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக ஜெய்தீப் பட்நகர் பொறுப்பேற்றார்.

ஜெய்தீப் பட்நகர் 1986ம் ஆண்டு இந்திய தகவல் பணி அதிகாரி. இவர், இதற்கு முன்பு தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் வர்த்தகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.

20 நாடுகள் உள்ளடக்கிய மேற்கு ஆசியாவுக்கான பிரசார் பாரதி சிறப்பு நிருபராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின் அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகளுக்கு தலைமை ஏற்றார்.

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பல பொறுப்புகளில் ஜெய்தீப் பட்நகர், ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். குல்தீப் சிங் தட்வாலியாவிடமிருந்து இப்பொறுப்பை ஜெய்தீப் பட்நகர் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.